சித்ராவின் நடத்தையில் சந்தேகம்?... ஹேம்நாத்திடம் நடந்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்...!
ஏற்கனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிடுவார் என்பது விசாரணையில் அம்பலமானது. தற்போது போலீஸ் விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
இதனிடையே சித்ராவை பதிவு திருமணம் கொண்ட அவருடைய கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சித்ரா - ஹேம்நாத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் தான் திருமணம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இன்று முதல் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை தொடங்கியுள்ளார். சித்ராவின் தாய் விஜயா, தந்தை காமராஜ் அக்கா சரஸ்வதி, அண்ணன் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
அதேபோல் சித்ராவின் கணவர் ஹேமந்த் நசரத்பேட்டை போலீசார் 6வது நாளாக விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
ஏற்கனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிடுவார் என்பது விசாரணையில் அம்பலமானது. தற்போது போலீஸ் விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஹேமந்த் சித்ரா மீது சந்தேகம் அடைந்ததாகவும், அதுகுறித்து அவருடன் சண்டை போட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை எல்லாம் அடிப்படையாக கொண்டே ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.