MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாதி மோதலைத் தூண்டுகிறதா பைசன் காளமாடன்..? இயக்குனர் மாரி செல்வராஜுக்கு எதிராக கொதிக்கும் சத்ரியர் படை..!

சாதி மோதலைத் தூண்டுகிறதா பைசன் காளமாடன்..? இயக்குனர் மாரி செல்வராஜுக்கு எதிராக கொதிக்கும் சத்ரியர் படை..!

சாதியின் காரணமாக அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் கிட்டான் வாழ்க்கையைக் கூறுகிறது. நாயகன் கிட்டான் கபடி வீரராக வலம் வந்து சாதி தடைகள், குடும்ப எதிர்ப்பு, ஊர் கலவரங்களைத் தாண்டி தேசிய அளவில் வெற்றிபெற முயல்கிறான்.

2 Min read
Thiraviya raj
Published : Oct 18 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் சமூக விமர்சன இயக்குநர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். அவரது படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்றவற்றில் பெரும்பாலும் சாதி, தீண்டாமை, சமூக அநீதி கருவை மையமாகக் கொண்டவை. இது சிலருக்கு சமூக மாற்றத்தின் கருவிகளாகத் தோன்றினாலும், மற்றவர்களால் சாதி வெறியைத் தூண்டும் படைப்புகளாகவும் விமர்சிக்கப்படுகின்றன. இந்த விவாதம் தமிழ் சமூகத்தின் ஆழமான சாதி பிளவுகளைப் பிரதிபலிக்கிறது.

24
Image Credit : Asianet News

அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பைசன் காளமாடன் சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்தப் படம், சாதி வெறி, கலவரங்கள், சமூக அநீதிகளை மையமாகக் கொண்டு, கபடி விளையாட்டு மூலம் உயர்வதற்கான போராட்டத்தை சித்தரிக்கிறது. ஆனால் படம் வன்முறையை ஊக்குவிப்பதை விட, அதன் கொடுமைகளை விமர்சித்து, சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்கிறார்கள். 1990களின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் சாதிக் கலவரங்கள், தீண்டாமை கொடுமைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது பைசன் படக்கதை.

 சாதியின் காரணமாக அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் கிட்டான் வாழ்க்கையைக் கூறுகிறது. நாயகன் கிட்டான் கபடி வீரராக வலம் வந்து சாதி தடைகள், குடும்ப எதிர்ப்பு, ஊர் கலவரங்களைத் தாண்டி தேசிய அளவில் வெற்றிபெற முயல்கிறான். சாதி தலைவர்களின் மோதல்கள், கொடூரங்கள், அரசியல் சூழல்கள் என உணர்ச்சிகளை குவித்துள்ளது.

Related Articles

Related image1
ஸ்டாலினையே மிரட்டும் முரட்டு உ.பி..! கட்சியின் ஆணிவேரையே அறுக்கப்பார்க்கிறீர்களா..? கடும் குற்றச்சாட்டு..!
34
Image Credit : Asianet News

இது தூத்துக்குடியைச் சேர்ந்தவரின் உண்மை வாழ்க்கை. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது. படம் வெறும் விளையாட்டு கதையாக இல்லாமல், சாதியின் வேர்களை அகற்றி, போராட்டத்தின் மூலம் அடையாளம் பெரும் கதை. இரு சாதி தலைவர்களின் வசனங்கள் மூலம், வன்முறையை விட நியாயத்தையும் சமூக மாற்றத்தையும் வலியுறுத்துகிறது. 1990களின் சாதிக் கலவரங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது.

44
Image Credit : Asianet News

இந்நிலையில், ‘‘தென் தமிழகத்தில் 1990 கால கட்டத்தில் நடைப்பெற்ற மறக்க வேண்டிய கசப்பான சம்பத்தை பைசன் திரைப்படமாக எடுத்து மீண்டும் சாதி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது எனக்கூறி இயக்குனர் மாரி செல்வராஜை கண்டித்து சத்திரிய சான்றோர் படை கட்சி சார்பில் ஆலங்குளத்தில் போராட்டம் நடைபெற்றது. 

தென் தமிழகத்தில் 1990 கால கட்டத்தில் நடைப்பெற்ற மறக்க வேண்டிய கசப்பான சம்பத்தை பைசன் திரைப்படமாக எடுத்து மீண்டும் சாதி கலவரத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் கண்டித்து சத்திரிய சான்றோர் படை கட்சி ஆலங்குளம் மாவட்ட செயலாளர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. pic.twitter.com/njNgxQcwWI

— Nadar News (@NewsNadar) October 18, 2025

About the Author

TR
Thiraviya raj
சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved