அருந்ததியின் பரிதாபநிலை..உடலெடை கூடியதால் கண்டுகொள்ளாத சினிமா உலகம்...
ஒரு காலத்தில் டாப் டென் நாயகிகளே முதல் இடத்தைப் பிடித்திருந்தவர் அனுஷ்கா ஷெட்டி. பின்னர் உடல் எடை கூடிய காரணத்தால் இவர் சினிமா உலகில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது
anushka shetty
நடிகை அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர்.. தமிழில், சுந்தர் C இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளன. தெலுங்குத் திரைப்படமான சூப்பர் மூலம் கடந்த 2005 -ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா.
anushka shetty
அனுஷ்கா ஷெட்டி தனது நடிப்புகளில் மூன்று CineMAA விருதுகள், ஒரு நந்தி விருது , ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட எக்கசக்க பார்ட்டுகளை பெற்றவர் . கிட்டத்தட்ட 47 படங்களில் தோன்றியுள்ளார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா குறிப்பிடப்படுகிறார்
anushka shetty
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருந்த நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இதற்கிடையே பாகுபலி 2வில் அனுஷ்கா சற்று உடல் பூசினப்போல இருந்தார் என விமர்சங்கள் எழுந்தன.
anushka shetty
இதற்கிடையே அனுஷ்கா ஷெட்டி சைஸ் ஜீரோ படத்தில் உடல் எடையை அதிகரித்து நடித்திருந்தார். மிகவும் குண்டான பெண்ணாக நடித்த அனுஷ்கா பின்னர் கடின உழைப்பால் உடல் எடையை குறைத்து பாகுபலி 2வில் தோன்றியிருந்தார். பின்னர் மீண்டும் அதிகரித்த உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா அவதிப்படுவதாக தெரிகிறது.
anushka shetty
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஆர் ஆர் ஆர் படவிழாவில் கலந்து கொண்ட அனுஷ்காவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த அளவிற்கு குண்டாகி இருந்தார் அனுஷ்கா. விரமங்கையாக இளசுகளின் கனவு கண்ணியகா இருந்த அனுஷ்காவிற்கு தற்போது உடல் எடை கூடிய காரணத்தால் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லையாம். அதோடு முன்பு இவர் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்த படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என யாரும் வாய்ப்பு தர தயாரா இல்லை என்றும் சொல்லப்படுகிறது.