#BREAKING வரி ஏய்ப்பு புகார்... நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு...!
இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரை அடுத்து மும்பையில் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தி திரையுலகில் பிளாக் ஃபிரைடே, தேவ் டி, தி லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். சமீபத்தில் இவர் மீது பாலிவுட்டின் இளம் நடிகையான பாயல் கோஷ், பாலியல் புகார் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் வீட்டிற்கு அழைத்து சோபாவில் தள்ளு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார் என பாயல் கோஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரை அடுத்து மும்பையில் இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸிக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பை மற்றும் புனேவில் இருவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
பிரபல தயாரிப்பாளர் விகாஷ் பாகல் என்பவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விகாஷுக்கு சொந்தமான பட தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான பாந்தம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததாக டாப்ஸி, அனுராக் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.