MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒத்து வராத விஜய்யை கழட்டி விட்ட பா.ரஞ்சித்..!! சூப்பர் ஹீரோ கதையை கைப்பற்றிய முன்னணி நடிகர் யார் தெரியுமா?

ஒத்து வராத விஜய்யை கழட்டி விட்ட பா.ரஞ்சித்..!! சூப்பர் ஹீரோ கதையை கைப்பற்றிய முன்னணி நடிகர் யார் தெரியுமா?

தளபதி விஜய்க்கு, இயக்குனர் பா.ரஞ்சித் கூறிய சூப்பர் ஹீரோ கதையில் வேறு ஒரு முன்னணி ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Sep 04 2021, 07:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, சர்வதேச அளவில் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யா முதல், சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலங்கள் வரை அனைவருக்குமே திரையுலகில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம்.

27

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் பா.ரஞ்சித்  'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். 

37

இவர் இயக்கத்தில் நடிக்கவே சில நடிகர்கள் போட்டி போடும் நிலையில், சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து, பா.ரஞ்சித் சூப்பர் ஹீரோ கதை ஒன்றை கூறியதாக தகவல் வெளியானது.

47

இந்த படத்தில் விஜய் நடிப்பாரா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்த நிலையில், திடீர் என இந்த படத்தில் மற்றொரு முன்னணி ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

57

திரைப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக கூட, தன்னுடைய உடலை வருத்தி ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர் சியான் விக்ரம் தான் தற்போது, விஜய்க்கு சொன்ன சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

67

எப்படியும் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் பீஸ்ட் படத்தை முடித்த பின்னர், வம்சி இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பின், பா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், விஜய் ஒத்து வராததால் அவரை பா ரஞ்சித் கழட்டி விட்டுட்டு தான் விக்ரமை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

77

வழக்கமான சூப்பர் ஹீரோ கதை போல் இல்லாமல், இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விக்ரம் நடித்து வரும், 'பொன்னியின் செல்வன்', 'மஹான்', மற்றும் 'கோப்ரா' ஆகிய படங்கள் அனைத்துமே இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் , இப்படங்களை முடித்த பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved