“உன் சிரிப்பை மீண்டும் காண காத்திருக்கிறேன்”... சிரஞ்சீவி சார்ஜாவின் கர்ப்பிணி மனைவியின் உருக்கமான பதிவு...!
பிரபல கன்னட நடிகரும், ஆக்ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். 39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து மணமுடித்த நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணமான இரண்டே ஆண்டுகளில் கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் கணவனை பிரிந்து வாடும் மேக்னா ராஜ் சோசியல் மீடியாவில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
சிரு, நான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாலும் உங்களிடம் நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு எப்படிப்பட்டவர் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் நண்பன், என் காதலன், என் பார்ட்னர், என் பிள்ளை, என் கணவர், என் ஆத்மாவில் ஒரு பதி நீ சிரு.
ஒவ்வொரு முறையும் வாசலைப் பார்க்கும்போது, 'நான் வந்துட்டேன்' என்று நீங்கள் சொல்லும் வார்த்தையை கேட்காதச் சூழலில், புரிந்துகொள்ள முடியாத ஒரு வலி என் ஆன்மாவை தாக்குகிறது.
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் உங்களை தொட முடியாத போது என் இதயம் வேதனையில் மூழ்குகிறது. மெதுவாகவும், வலியோடும் செல்கிறது ஆயிரம் இறப்புகளை போல
ஆனால் உடனடியாக என்னை சுற்றி ஒரு அதிசயத்தை உணர்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் பலவீனமாக இருக்கும் போதெல்லாம் நீங்கள் என்னுடன் பாதுகாக்கும் தேவதை போல் இருப்பதை உணர்கிறேன்.
இந்த இனிமையான அதிசயத்திற்காக நான் என்றுமே உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நம் குழந்தை வடிவில் உன்னை இந்த உலகிற்கு மீண்டும் கொண்டு வர காத்திருக்கிறேன்.
நீங்கள் என்னை அதிகமாக விரும்பிய காரணத்தால்தான் என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லவில்லை. இல்லையா? நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை.
உங்களுடைய புன்னகையை மீண்டும் காண ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். அறை முழுவதும் ஒளிரச் செய்யும் உங்கள் சிரிப்பை காண ஆர்வமாக இருக்கிறேன்.
நான் உங்களுக்காக காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக மறுபுறத்தில் காத்திருக்கிறார்கள் என் இறுதி மூச்சு வரை நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள். ஏனென்றால் நீ என்னுள் இருக்கிறாய். ஐ லவ் யூ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.