தேவதை வம்சம் நீயோ... வெள்ளை நிற சேலையில் ஏஞ்சல் போல் ஜொலித்த நயன்! அழகில் மயங்கிய ரசிகர்கள்!
நடிகை நயன்தாரா, இன்று நடைபெற்ற பிரபல தனியார் ஊடகத்தின் விருது விழாவில், ஏஞ்சல் போல் வெள்ளை சேலையில் வந்து ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
திருமணம் ஆகி, குழந்தை இருக்கும் நிலையில்.. தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் ஹீரோயினாக நடித்து வருபவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் 'ஐயா' படத்தில் அறிமுகமான போது, நயன்தாராவே... இவ்வளவு பெரிய உச்சத்தை அடைவார் என நினைத்திருக்க மாட்டார். காரணம் தன்னுடைய அறிமுக படங்களில் பாவாடை தாவணி, மற்றும் சேலையில் தான் தோன்றினார்.
இவரின் முதல் படமான 'ஐயா' படத்தில், பாவாடை குட்டையாக கொடுத்ததற்கு, இதை போட மாட்டேன் என அடம்பிடித்த நயன், ஒரு சில வருடங்களில், வல்லவன் படத்தில் ரீமா சென்னுடன் டான்ஸ் ஆடியபோது அவங்களை போல, எனக்கும் ஏன் குட்டி பாவாடை தரவில்லை என கேட்கும் அளவிற்கு மாறினார்.
குறிப்பாக பில்லா படத்தின், செம்ம போல்டாக... பிகினி உடையில் வந்து ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்தார். இப்படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது.
என்ன விசேஷம்? முதல் முறையாக குடும்பத்தினருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த ரம்யா பாண்டியன்!
நயன்தாரா இவ்வளவு உயரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம், அவர் கடந்து வந்த பாதைகள் பூ விரித்து வைத்த பாதைகள் இல்லை, கல்லும் முள்ளும் நிறைத்தது போன்ற பாதைகள் தான். சில காதல் விவகாரங்களில் சிக்கி பல வலிகளை தாங்கியதே இவரை மிகவும் வலிமையான பெண்ணாக மாற்றியது.
சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வரும் நயன், ஷாருக்கானுக்கு ஜோடியாக... ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பில்லா படத்திற்கு பின்னர், பிகினி உடையில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விருது விழாவில் கலந்து கொண்ட நயன் வெள்ளை நிற சேலையில்.. அழகு தேவதை போல் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. நடிகை சாக்ஷி அகர்வாலும் நயன்தாராவுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.