மீண்டும் ஒன்றாக நடிக்கப் போகும் சூர்யா - ஜோதிகா... இயக்குநர் யாரு தெரியுமா?
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜோடியான சூர்யா - ஜோதிகா இருவரும் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா - ஜோதிகா ஒன்றாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். வசந்த் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் 1999ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இளம் காதல் ஜோடியாக நடித்த சூர்யா - ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கே.ஆர்.ஜெயா எழுதி இயக்கிய “உயிரிலே கலந்தது” படத்தில் இரண்டாவது முறையாக சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக இணைந்தனர். தேவா இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டுமல்லாது, இருவரது கெமிஸ்ட்ரியும் செம்ம ஹிட்டானது.
சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு சிகரம் வைத்தது போல் அமைந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘காக்க காக்க’. இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் சூர்யாவும், மாயா டீச்சராக வரும் ஜோதிகாவும் செம்ம ஸ்டைலிஷாக இருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
சசி சங்கர் இயக்கத்தில் 2004ஆம் வருடம் வெளியான “பேரழகன்” படத்தில் இருவரும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தனர். சூர்யா - ஜோதிகா நடிப்பு திறமைக்கு தீனி போடும் படமாக “பேரழகன்” அமைந்தது.
நடிகர் சிங்கம்புலி இயக்கத்தில் பாலா மற்றும் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிப்பில் வெளியான “மாயாவி” படத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்தார்கள்.
ரேவதி.எஸ்.வர்மா இயக்கத்தில் 2006ஆம் வருடம் வெளியான “ஜூன்.ஆர்” படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் சூர்யா நடித்திருந்தார்.
இறுதியாக இந்த சூப்பர் ஜோடி அசத்தியது ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படம். 2006ம் ஆண்டு இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலேயே சூர்யாவும் ஜோதிகாவும் திருமணம் செய்துகொண்டனர்.
அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மகனும், மகளும் பெரியவர்களாகி விட்டதால் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில் மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். சமீபத்தில் நடிகர் சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், அதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறி ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.
மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் அஞ்சலி மேனன் தயாரிப்பில் சில்லுக்கருப்பட்டி புகழ் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்க உள்ள புதிய படத்தில் இருவரும் ஒன்றாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.