சினிமாவிற்கு வரும் முன்பு சென்றாயன் பார்த்த வேலை என்ன தெரியுமா?... பாவம் மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார்!
சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடிகர் சென்றாயன் பார்த்த சில சுவாரஸ்யமான வேலைகள் பற்றி தற்போது தெரியவந்துள்ளது.
'பொல்லாதவன்’, `ஆடுகளம்’, `மூடர்கூடம்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சென்றாயன்.
சினிமாவில் தனக்கென தனி ஒரு அடையாளம் தேடி அலைந்த சென்றாயனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது.
அதற்கு முன்னதாக சென்றாயன் பல படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சென்றாயனுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
குடும்ப வாழ்க்கையை இன்ப மயமாக நடத்தி வரும் சென்றாயன், சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்காக கடும் முயற்சி செய்து வருகிறார்.
சிறுவயது முதலே சினிமா மேல் அதிக ஆர்வம் கொண்ட சென்றாயன் தினமும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டிற்கு அருகே இருந்த தியேட்டர் ஒன்றில் சமோசா விற்றுள்ளார்.
பொல்லாதவன் படம் மூலம் நடிக்க வந்த சென்றாயன் அந்த படத்தின் டிக்கெட்டுகளையே காசி தியேட்டர் வாசலில் நின்று பிளாக்கில் விற்றுள்ளார்.
அப்போது சென்றாயன் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன் உரிமையாளர்களை பணியாளர்களை அழைத்துச் செல்ல 200 டிக்கெட் வாங்கியுள்ளார். ஆனால் அவர் அவசர வேலையாக சொந்த ஊர் சென்றுவிட. அந்த டிக்கெட்டுக்களை சென்றாயனிடம் கொடுத்து உன் நண்பர்களுடன் போய் பார் என கூறியுள்ளார்.
ஆனால் அப்போது தனக்கு பண கஷ்டம் இருந்ததால் தியேட்டர் வாசலில் நின்று பிளாக்கில் டிக்கெட் விற்றதாகவும், தான் நடிச்ச படத்தின் டிக்கெட்டை தானே பிளாக்கில் விற்ற நடிகன் நானாக தான் இருப்பேன் என்றும் பழசை நினைவு கூறுகிறார் சென்றாயன்.