3வது முறையாக அப்பாவானார் இயக்குநர் செல்வராகவன்... குழந்தையின் பெயருடன் அறிவிப்பை வெளியிட்ட கீதாஞ்சலி...!
விரைவில் புதிய குடும்ப உறுப்பினரை எதிர்பார்த்து காத்திருந்த இந்த தம்பதி நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகை சோனியா அகர்வாலுடனான விவாகரத்திற்கு பிறகு
செல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.
2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர்.
இதனிடையே 3வது முறையாக கீதாஞ்சலி கர்ப்பமானார். Pregnancy belly உடன் கலக்கலான மார்டன் உடையில் விதவிதமான போட்டோ ஷூட்களையும் நடத்தியிருந்தார். அவை அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
சமீபத்தில் கூட நிறைமாத வயிறுடன் தனுஷ், ஐஸ்வர்யாவுடன் புத்தாண்டு மற்றும் ஐஸ்வர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
விரைவில் புதிய குடும்ப உறுப்பினரை எதிர்பார்த்து காத்திருந்த இந்த தம்பதி நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று காலை செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையான அதற்கு ரிஷிகேஷ் செல்வராகவன் என பெயர் வைத்துள்ளதாக கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகை ஷெரின், ராதிகாவின் மகள் ரயன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.