- Home
- Cinema
- Director Mysskin : மனைவியை பிரிந்தது ஏன்?... முதன்முறையாக மவுனம் கலைத்த இயக்குனர் மிஷ்கின்
Director Mysskin : மனைவியை பிரிந்தது ஏன்?... முதன்முறையாக மவுனம் கலைத்த இயக்குனர் மிஷ்கின்
Director Mysskin : மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை இதுவரை வெளியே சொல்லாமல் இருந்து வந்த மிஷ்கின், சமீபத்திய பேட்டியில் அதுகுறித்து பேசியுள்ளார்.

நரேன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.
இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு 2 திரைப்படம் உருவாகி உள்ளது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இயக்குனர் மிஷ்கினுக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறார். ஆனால் அவர் தனது மனைவியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிந்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை இதுவரை வெளியே சொல்லாமல் இருந்து வந்த மிஷ்கின், சமீபத்திய பேட்டியில் அதுகுறித்து பேசியுள்ளார்.
அதன்படி, அவர் தனது மனைவியை பிரிவதற்கு முக்கிய காரணமாக இருந்தது சினிமா தான் என தெரிவித்துள்ளார். சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்ததால், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதாகவும், அதன் காரணமாகவே இருவரும் ஒருமனதாக பேசி பிரிந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... அட்லீயின் சிஷியன் என நிரூபித்த சிபி... 2 படங்களின் தாக்கத்துடன் கூடிய ‘டான்’ எப்படி இருக்கு? - முழு விமர்சனம்