குடும்பத்துக்காக திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாரா நயன்தாரா? இது தான் காரணமாம் வெளியான தகவல்!
நடிகை நயன்தாரா சமீபத்தில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்று வந்தது அனைவரும் அறிந்தது தான். இம்முறை சென்ற போது, தன்னுடைய தந்தை வற்புறுத்தல் காரணமாக காதலரை திருமணம் செய்ய ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க துவங்கிய போது, இருவருக்கு இடையிலும் பற்றிய காதல் தீ, தற்போது வரை கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. 6 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடியின் கல்யாணம் எப்போது என்பது தான் கோலிவுட்டில் டாப் டாக்கே.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01f9b3xtwyytkgcrkmtn6yq9c9/e49pud8veamgry6-jpg_300x393xt.jpg)
ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேட்ட கேள்விக்கு, “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றும் மற்ற விஷயங்களுக்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்” என விக்னேஷ் சிவன் பதிலளித்தது தாறுமாறு வைரலானது.
நயன்தாரா எங்கு சென்றாலும் விக்கி இல்லாமல் போவது கிடையாது. இப்ப எல்லாம் ஒரு படி மேலே போய் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறது இந்த காதல் ஜோடி.
காதல் சுற்றுலா என்றால் முந்திக்கொள்ளும் இந்த ஜோடிகள் திருமணம் என்ற கேள்வி வந்தால் மட்டும் பம்மி வந்தனர். ஆனால் சமீபத்தில் இவர்கள் கொச்சிக்கு சென்ற போது, இவர்களது திருமணம் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நயன்தாராவின் தந்தை தற்போது சற்று சுகவீனமாக இருப்பதால், மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாகவும் இதனால், நயன்தாராவும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
எனவே இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் இந்த வருடத்திலேயே நடக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. அவ்வப்போது நயன் - விக்கி திருமண தகவல்கள் சமூக வலைத்தளத்தை கடந்து செல்வதுபோல் இந்த தகவலும் போய் விடுமா? அல்லது இவர்களுக்கு இந்த வருடத்திலேயே திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.