'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு ஏற்பட்ட சோகம்..! வருத்தத்தில் ரசிகர்கள்..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பிரபலமான மணிமேகலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது.
தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, கொண்ட தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மணிமேகலை.
சிவனேனு இருக்கும் குக்குகளை கூட, தன்னுடைய வாயாலேயே பல பிரச்சனையில் சிக்க வைத்து, பல சிறப்பான சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்.
எனவே குக்குகள் பலரும், மணிமேகலையை தவிர எந்த கோமாளி வேண்டுமானாலும் வரலாம் என கதறுவார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
குறிப்பாக இவர் அடிக்கும் காமெடி அல்டிமேட், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.
இந்நிலையில் இவர் தனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் இரண்டு வாரங்கள் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை என்று சமீபத்தில் படித்தேன், நல்லா இருந்தது இந்த வரிகள் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு சின்ன விபத்து தனக்கு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நலமாக இருக்கின்றேன். இரண்டு வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன். என்னுடைய குழுவை மிகவும் மிஸ் செய்கிறேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கடைசியாக 'முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க.... என்று குறிப்பிட்டிருப்பதால் அவருக்கு சுடுதண்ணீர் ஊற்றியதால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் மணிமேகலையின் ரசிகர்கள் பலர் மிகவும் வருத்தத்தோடு விரைவில் அவர் குணமடைய வேண்டும் தெரிவித்து வருகிறார்கள்.