MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோயம்புத்தூரில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி திடீரென ஒத்திவைப்பு - காரணம் என்ன?

கோயம்புத்தூரில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி திடீரென ஒத்திவைப்பு - காரணம் என்ன?

இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரில் கோயம்புத்தூரில் மே 17ந் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

1 Min read
Ganesh A
Published : May 12 2025, 02:23 PM IST| Updated : May 12 2025, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilayaraja concert postponed!
Image Credit : Google

Ilayaraja concert postponed!

இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது 81 வயது ஆனாலும் இந்த வயசிலும் பம்பரம் போல் பிசியாக சுழன்று வருகிறார். அவர் இசையமைத்த பாடல்கள் தான் இன்றைக்கும் ஏராளமான படங்களில் பயன்படுத்தப்பட்டு, அது மீண்டும் டிரெண்டாகி வருகின்றன. இன்றைய சூழலில் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்துவது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது. அண்மையில் தன்னுடைய முதல் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றி வரலாறு படைத்தார் இளையராஜா.

24
இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி
Image Credit : Google

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி

இசைஞானி இளையராஜா, படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் தமிழ்நாட்டில் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் கரூரில் இவரின் இசைக்கச்சேரி நடைபெற்ற நிலையில், அடுத்ததாக கோவையில் வருகிற மே 17ந் தேதி இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டு இருந்தார் இளையராஜா.

Related Articles

Related image1
Ilaiyaraaja : மகளை பறிகொடுத்திருக்கிறேன்... பவதாரிணி மறைவால் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நோ சொன்ன இளையராஜா
Related image2
Ilaiyaraaja: பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தலைவணங்குகிறேன்; இளையராஜா நெகிழ்ச்சி பதிவு!
34
இசைக்கச்சேரியை தள்ளிவைத்த இளையராஜா
Image Credit : Google

இசைக்கச்சேரியை தள்ளிவைத்த இளையராஜா

இசைக்கச்சேரிக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியை திடீரென தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அதன்படி அந்த இசைக்கச்சேரி மே 17ந் தேதிக்கு பதிலாக மே 31ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் இந்த இசைக்கச்சேரியை தள்ளிவைத்து உள்ளார்களாம். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

44
நிதி வழங்கிய இளையராஜா
Image Credit : Google

நிதி வழங்கிய இளையராஜா

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜா, தேசிய பாதுகாப்பு நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்தையும், தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தையும் வழங்குவதாக அறிவித்து இருந்தார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வந்தன. அண்மையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்களை தகர்த்தது. இதன் பின்னர் பாகிஸ்தானும் பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved