MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சினிமா பாணியில் நடந்த கொள்ளை... பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகையை அபேஸ் பண்ணிய கும்பல்

சினிமா பாணியில் நடந்த கொள்ளை... பிரபல நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 250 சவரன் நகையை அபேஸ் பண்ணிய கும்பல்

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல நடிகரின் வீட்டில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் திருடர்கள் 250 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

1 Min read
Ganesh A
Published : Nov 11 2022, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ராதாகிருஷ்ணன். சுருக்கமாக ஆர்.கே. என அழைக்கப்படும் இவர் விஜய்யின் ஜில்லா மற்றும் பாலாவின் அவன் இவன் போன்ற படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர் ஆவார். 63 வயதாகும் இவர் சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்கிற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

23

நேற்று நடிகர் ஆர்.கே வீட்டில் கொள்ளைசம்பவம் அரங்கேறி உள்ளது. வேலை காரணமாக ஆர்.கே. வெளியில் சென்றதை அடுத்து, அவரது மனைவி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் மூன்று பேர், ராஜியை கட்டிப்போட்டு, அவரது வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டு, வீட்டில் இருந்த 250 சவரன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்... நான் எதையும் திருடல.. என்மேல பாலியல் புகார் கொடுப்பேன்னு மிரட்டுறாங்க- பார்வதி நாயர் மீது இளைஞர் சரமாரி புகார்

33

இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள், கொள்ளை சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் வீட்டில் இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வீட்டில் பணியாற்றிய நேபாளத்தை சேர்ந்த வாட்ச்மேனும் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

இதன்பின்னர் நடிகர் ஆர்.கே. நந்தம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை வலைவீசி தேடி வரும் போலீசார், அவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு அவர்களது புகைப்படங்களை அனுப்பி தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...  பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்... காத்துவாக்குல ரிலீஸ் தேதியை கசியவிட்ட உதயநிதி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொள்ளை
சென்னை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved