சித்ரா போலவே இருக்கும் கீர்த்தனா இந்த பிரபலத்தின் பேத்தியா? அட இது தெரியாமல் போச்சே..!
நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மட்டும் இன்றி, ஆர்.டி.ஓ அதிகாரிகளும் பரபரப்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்ராவின் தற்கொலை குறித்து அவ்வப்போது அவரது தோழிகளும் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது நாம் அறிந்தது தான்.
இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக, அச்சு அசல் சித்ரா போலவே இருக்கும் பிரபலத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்தது.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் பெயர் கீர்த்தனா தினகர் என்று தெரியவந்தது.
இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்றும், தற்போது தொகுப்பாளராக பணியாற்றி வரும் தகவல்களும் வெளிவந்தது.
இந்நிலையி இவர் குறித்து மிகவும் சுவாரஸ்யமான மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தனா தினகர் வேறு யாரும் இல்லை, மறைந்த பழம்பெரும் நடிகை சௌதாவின் பேத்தி தானாம்.
பல்வேறு தமிழ் படங்களில் நடித்து பிரபலமான சௌதா, வடிவேலுவின் அது நல்ல வாய் இது நார வாய் என்கிற காமெடியில் மிகவும் பிரபலம்.
இவரது இரண்டாவது மகள், செல்வி என்பவற்றின் மகள் தான் கீர்த்தனா தினகர், தன்னுடைய பாட்டி தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.