சித்ராவின் திருவான்மியூர் சொகுசு வீடு - ஆடி கார் எப்படி வந்தது? பகீர் கிளப்பும் தோழி..!
First Published Dec 25, 2020, 1:53 PM IST
சித்ரா தற்கொலை விவகாரம் குறித்து இதுவரை உண்மை தகவல் வெளியாகாத நிலையில், சித்ரா திருவான்மியூரில் கட்டி வந்த சொகுசு பங்களா மற்றும் ஆடி கார் குறித்து, சித்ராவின் தோழி கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
Today's Poll
புதிய கேம்களை எப்படி கண்டறிவீர்கள்?