கர்ப்பிணி மனைவியை கை பிடித்து அழைத்து செல்லும் மறைந்த கணவர் சிரஞ்சீவி சர்ஜா..! வைரலாகும் ஓவியம்..!
நடிகை மேக்னா ராஜ் கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்துக் கொண்டு தன்னுடைய வளயகாப்பு நிகழ்வை நடத்தினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் பிரபல ஓவியர் கரண் ஆச்சாரியா, மேக்னா ராஜ்ஜின் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று, கர்ப்பமாக இருக்கும் மேக்னா ராஜ் கையை பிடித்து சிரஞ்சீவி சர்ஜா அழைத்து செல்வது போல், தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
இந்த ஓவியம், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கணவரை இழந்து நிற்கும் நடிகை மேக்னா ராஜ் சந்தோஷ படும் விதத்தில், மேக்னாராஜ் வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது மறைந்த கணவர் சிரஞ்சீவி சார்ஜா அருகில் இருப்பது போன்று புகைப்படத்தை மாற்றித் தாருங்கள் என்று கரண்னிடம் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வேண்டுகோளை ஏற்ற கரண் ஆச்சாரியா, கர்ப்பிணியான மேக்னாராஜ் அருகில் அவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜா அவரது கையை பிடித்து நிற்பது போல் மாற்றியுள்ளார்.
இந்த வேண்டுகோளை ஏற்ற கரண் ஆச்சாரியா, கர்ப்பிணியான மேக்னாராஜ் அருகில் அவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜா அவரது கையை பிடித்து நிற்பது போல் மாற்றியுள்ளார்.
இந்த புகைப்படத்தை சிரஞ்சீவி சர்ஜாவின் ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரண் அந்த ரசிகரின் வேண்டுகோளுடன், மேக்னா ராஜியின் இந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.