நாளை திருமணம்... தம்பி மகளுக்கு பெரியப்பா சிரஞ்சீவி கொடுத்த காஸ்ட்லி கிப்ட்... விலை என்ன தெரியுமா?
தம்பி மகள் நிஹாரிகாவிற்கு திருமண பரிசாக சிரஞ்சீவி கொடுத்துள்ள விலையுயர்ந்த கிப்ட் குறித்து தான் தெலுங்கு திரையுலகில் ஒரே பேச்சாக உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் கலைக் குடும்பத்திற்கு என்று தனி பெருமையும், ரசிகர்கள் பட்டாளமும் உண்டு. அவர்கள் குடும்பத்தில் நடக்கும் சிறிய விஷேசங்கள் கூட ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும். தற்போது சிரஞ்சீவியின் தம்பியான நாகபாபுவின் மகள் நிஹாரிகா திருமணம் தான் தெலுங்கு ரசிகர்களின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நிஹாரிகா, தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நிஹாரிகாவிற்கும், குண்டூர் ஐஜி-யின்
மகனான இன்ஜினியர் சைதன்யாவிற்கும் ஐதராபாத்தில் உள்ள
நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
நிஹாரிகா - சைதன்யா திருமணம் நாளை மாலை 7.15 மணிக்கு
உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ஓபராய் உடை விலாஸ்
அரண்மனையில் நடைபெற உள்ளது. மிக பிரம்மாண்டமாக
நடக்கும் திருமண ஏற்படுகள் அனைத்தையும் நிஹாரிகாவின்
சகோதரர் வருண் தேஜ் தான் கவனித்து வருகிறார்.
திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும்
தனி விமானம் மூலம் உதய்பூர் கிளம்பி சென்றுள்ளனர். அந்த
போட்டோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி
வருகிறது.
நேற்று நடைபெற்ற நலங்கு நிகழ்ச்சியில் நிஹாரிகா தன்னுடைய
அம்மாவின் நிச்சயதார்த்த புடவையை அணிந்திருந்தார்.
அதுதொடர்பான போட்டோஸ் வெளியாகி சோசியல் மீடியாவில்
வைரலானது.
இந்நிலையில் தன்னை எப்போதும் அன்புடன் ‘அப்பா’ என்று
அழைக்கும் தம்பி மகள் நிஹாரிகாவிற்காக சிரஞ்சீவி ஒன்றரை
கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த நகைகளை பரிசாக
கொடுத்துள்ளாராம். அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் ஒரு
வீட்டையும் வாங்கி கொடுத்துள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.