MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது சிக்கனா இல்ல காக்கா கறியா? ஆசை ஆசையாய் கே.எஃப்.சி-யில் சாப்பிட போன வனிதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இது சிக்கனா இல்ல காக்கா கறியா? ஆசை ஆசையாய் கே.எஃப்.சி-யில் சாப்பிட போன வனிதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்றபோது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக வனிதா புகார் தெரிவித்து உள்ளார்.

2 Min read
Ganesh A
Published : Mar 19 2023, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா, ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு கூட ஜோடியாக நடித்துள்ள வனிதாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட வனிதா, அந்த சீசனில் கொளுத்திப்போட்டு சண்டையை உருவாக்குவதில் கில்லாடியாக இருந்து வந்தார்.

24

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதா. இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவில்லை. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பீட்டர்பால் குடித்துவிட்டு தகராறு செய்ததால், அவரை துரத்திவிட்டார் வனிதா.

இதையும் படியுங்கள்... ஆசைக்காட்டி அம்போனு விட்டுட்டுபோன அஜித்... ஏகே 62-வை மறக்க முடியாமல் திண்டாடும் விக்னேஷ் சிவன்

34

அதன்பின் எந்தவித சண்டை சச்சரவுகளிலும் சிக்காமல் இருந்து வந்த வனிதா, நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 பைனலில் விக்ரமன் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவர் எதிர்பார்த்தபடியே விக்ரமன் ஜெயிக்காததால், அந்த சீசன் வின்னர் அசீமை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தி இருந்தார் வனிதா.

44

இப்படி சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் வனிதா, தற்போது கே.எஃப்.சி-யில் ஆசை ஆசையாய் சாப்பிட சென்று அப்செட் ஆனதாக பதிவிட்டுள்ளார். ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்றபோது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக வனிதா புகார் தெரிவித்து உள்ளார்.

கஸ்டமர் சர்வீஸும் மோசமாக இருந்ததாக அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ள வனிதா, தனக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்ததாக பதிவிட்டு, உலகத்தில் இதுபோன்ற சிறிய சிக்கனை பார்த்ததுண்டா, இது சிக்கனா அல்லது காக்காவா என கேள்வி எழுப்பி உள்ளார். அந்த சிக்கனின் புகைப்படங்களையும் பதிவிட்டு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார் வனிதா. உங்களுக்கு இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துகிறோம் என கே.எஃப்.சி-யும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... Dhanush : என்னது இவங்க மறுபடியும் சேரப்போறாங்களா..! குட் நியூஸ் உடன் காத்திருக்கும் தனுஷ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved