கொட்டும் மழையில் நனைந்தபடி சுஷாந்த் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் பாலிவுட் பிரபலங்கள்..! புகைப்பட தொகுப்பு!
நேற்று மதியம் 2 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடல் தற்போது மும்பையில் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இவருடைய உடலுக்கு மழையில் நனைந்தபடி பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் சுஷாத் சிங் ராஜ்புத், 34 வயதில் தற்கொலை செய்து கொண்ட விஷயம் பாலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது.
இந்த செய்து அறிந்து, அதிர்ச்சியான பிரபலங்கள்... முகத்தில் மாஸ்க்குடன் மழையில் நனைந்தபடி இவருக்கு நேரில் வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
நடிகை ஷ்ரத்தா கபூர் முதல் ஆளாக பவன் ஹன்ஸ் பகுதிக்கு வந்தார்.
மேலும் மழையையும் பொருட்படுத்தாமல் பலர் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
நடிகர் சுஷாந்த்துடன் திரையுலகில் நெருக்கமாக பழகிய நண்பர்கள் மற்றும் அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் மழையில் நனைந்த நிலையில் இருந்து அஞ்சலி செலுத்த செல்லும் காட்சி.
பலர் குடை பிடித்து அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள்.
நடிகை கிருதி சனோன், ஷ்ரத்தா கபூர் ,வருண் சர்மா, நடிகர் விவேக் ஓபராய், மற்றும் இயக்குனர் அபிஷேக் கபூர் மற்றும் மனைவி பிரக்யா உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி.
நடிகர் விவேக் ஓபராய் வரும் காட்சி
இளம் நடிகருக்கான திரண்ட பாலிவுட் பிரபலங்கள்
மழையில் நனைந்தபடி இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலம்