அழுதுகொண்டே இருக்கும் லாஸ்லியாவிடம் பேசினேன்... வனிதா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், பைனல் வரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா. இவரது தந்தை மரியநேசன் நவம்பர் 15 ஆம் தேதி இரவு திடீரென மரணம் அடைந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், சோகத்தில் இருக்கும் லாஸ்லியாவிடம் பேசியதாக பிக்பாஸ் சக போட்டியாளர்களின் ஒருவரான வனிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நான் லாஸ்லியாவுடன் சற்றுமுன் பேசினேன் என்றும் அவர் அழுது கொண்டு இருந்தாலும் மன உறுதியுடன் இருக்கிறார் என்றும் அவர் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் விஜய் டிவி நிர்வாகம் இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி லாஸ்லியாவை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் காலமானதை அடுத்து, தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவருடைய உடல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் ஆகும் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இவருடைய குடும்பத்தினர் இவரை வெறுத்தாலும், வனிதா ஒரு முறை கூட தன்னுடைய குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருப்பது பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தி உள்ளது.