பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்..! எதிர்பாராத தகவலை வெளியிட்ட விஜய் டிவி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் குறித்து, ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம்.
16 போட்டியாளர்களுடன் கலகலப்பாக துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்ட தட்ட 3 மாதங்களை கடந்து இறுதி நாட்களை நெருங்கிவிட்டது.
தற்போது 92 ஆவது நாளில், ரம்யா, ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேப்ரில்லா, ஷிவானி, பாலாஜி ஆகிய 7 பேர் இறுதி போட்டிக்காக தயாராகி வருகிறார்கள்.
இன்னும் இரண்டு வாரமே மிஞ்சியுள்ள நிலையில், அடுத்த வாரம் இரண்டு நபர் வெளியேற்றப்படுவார் என கூறப்படுவதால் யார், யார், பிக்பாஸ் பைனலுக்கு செல்வார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது.
இந்நிலைலையில் திடீர் என பிக்பாஸ் ஒளிபரப்பாக நேரம் மாற்றப்பட்டுள்ளதாக விஜய் டிவி தரப்பு அறிவித்துள்ளது.
இதுவரை, தினமும் இரவு 9 : 30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, இன்று முதல் 10 :00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இது பிக்பாஸ் ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத தகவலாக இருந்தாலும், காத்திருந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க பல ரசிகர்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.