பிக்பாஸ் டைட்டில் கைப்பற்றிய கையேடு ஆரி ஒப்பந்தமான முதல் படம்..! ஹீரோயின் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல கோடி வாக்குகளை பெற்று வெற்றிவாகை சூடிய, நடிகர் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒப்பந்தமான முதல் படம் குறித்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
ஆரி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் மும்பே நடித்து முடித்த ’எல்லாம் மேல் இருக்குறவன் பாத்துக்குவான்’, ‘அலேகா’, ‘பகவான்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. விரைவில் இந்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையேடு, புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அபின் என்பவர் இயக்கும் இந்த படத்தில், நடிகை வித்யா பிரதீப் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று சென்னையில் நடந்த இந்த படத்தின் பூஜையில் இயக்குனர்கள் சுந்தரராஜன், ஏஆர் முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், படம் குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.