MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஆணாதிக்கம் உள்ள வீடாக மாறுகிறதா பிக்பாஸ்? பெண்களை இப்படியா கொடுமைப்படுத்துவது!

ஆணாதிக்கம் உள்ள வீடாக மாறுகிறதா பிக்பாஸ்? பெண்களை இப்படியா கொடுமைப்படுத்துவது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களை அடிமைகள் போல் ஆண்கள் நடத்துவதாக சர்ச்சை எழுத்து இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Oct 15 2024, 02:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில், மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் எலிமினேட் ஆனார். அவரின் எவிக்‌ஷனுக்கு பின் தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 17 போட்டியாளர்கள் எஞ்சி உள்ளனர்.

24
Jacquline

Jacquline

பிக்பாஸ் வீட்டில் வார வாரம் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் வெற்றி பெற்று சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. இதில் தங்களிடம் உள்ள பணத்துக்கு அதிகமாக ஆண்கள் அணியினர் பர்சேஸ் செய்ததால் அவர்களுக்கு இந்த வாரத்திற்காக ஷாப்பிங் செய்த மளிகை பொருட்கள் வழங்கப்படாது என பிக்பாஸ் அறிவித்தார். மறுபுறம் பெண்கள் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கம்மியாக பர்சேஸ் செய்ததால் அவர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... கேப்டனான சத்யா, முட்டி மோதிய ஹவுஸ்மேட்ஸ், பரபரப்பான வீடு – 2ஆவது வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்?

34
Bigg Boss Contestants

Bigg Boss Contestants

இதேபோல் கிச்சன் ஆண்கள் அணியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அங்கு சென்று சமைக்கவோ அல்லது இதர வேலைகளை செய்யவோ ஆண்கள் அணியினரை கேட்டுவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். அப்படி அனுமதி கேட்கும் போது அவர்களுக்கு ஆண்கள் அணியினர் சில டாஸ்குகளை கொடுப்பது வழக்கம். அப்படி கடந்த வாரம் வரை பாட்டுபாட சொல்லியும், நடனமாட சொல்லியும் டாஸ்க் கொடுத்து வந்த நிலையில், தற்போது அவர்கள் கொடுக்கும் டாஸ்க் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

44
Boys vs Girls

Boys vs Girls

அதன்படி ஆண்கள் அணியை சேர்ந்த முத்துக்குமரன், பெண்கள் அணியில் இருந்து ஜாக்குலின், சாச்சனா ஆகிய இருவரை மட்டுமே சமைக்க அனுப்புவோம். அப்படி செல்வோர் சமைப்பது மட்டுமின்றி ஆண்கள் அணியினர் சாப்பிட்ட பாத்திரங்களையும் கழுவ வேண்டும் இந்த டாஸ்குக்கு சம்மதித்தால் தான் சமைக்க அனுப்புவோம் என கூறியதை கேட்டு கோபமடைந்த பெண்கள் அவரிடம் வாக்குவாதம் செய்யும் புரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. அதில் சாச்சனா, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கண்ணீர்விட்டு அழுகிறார். இப்படி பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக ஆண் போட்டியாளர்கள் விளையாடி வருவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ஆணாதிக்கம் உள்ள நிகழ்ச்சியாக பிக்பாஸ் மாறுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

இதையும் படியுங்கள்... குடும்பமும் கானாவும் தான் உயிரு; பிக் பாஸ் வீட்டில் சக்க போடு போடும் கானா ஜெஃப்ரி! யார் இவர்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved