“பாண்டியன் ஸ்டோர்ஸ்” “பாரதி கண்ணம்மா” சீரியல்களில் அதிரடி மாற்றம்... பிக்பாஸுக்காக விஜய் டிவி செய்த காரியம்!
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக “ஆயுத எழுத்து” சீரியலை திடீரென நிறுத்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மேலும் சில சீரியல்களிலும் விஜய் டி.வி. நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கிறது விஜய் டி.வி. முழுக்க, முழுக்க பொழுது போக்கு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஆரம்பம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 5 ஆம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9.30 தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்ட ஆரம்பம் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதைத் தொடர்ந்து 5 ஆம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9.30 தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
இதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பல சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக “ஆயுத எழுத்து” சீரியலை திடீரென நிறுத்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் மேலும் சில சீரியல்களிலும் விஜய் டி.வி. நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘செந்தூரப்பூவே’ தொடர் இனி இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பி.ஏ. தொடர் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இனி இரவு 8.00 – 8.30 மணி வரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகம் முழுவதும் மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு வரவேற்பு பெற்று விட்ட ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 8.30-9.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.