இன்று இரவு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார்?... கமல் ட்விஸ்ட்டுக்கு கிடைத்த பதில் இதோ..!
கமல் ஹாசன் இப்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களோ இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என குழம்பி வந்தனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிய இன்னும் ஒருவாரமே உள்ளது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொகுப்பாளர் கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம்.
வீட்டிற்குள் நடக்கும் காரசாரமான விவாதங்கள், சண்டை, சச்சரவுகள் அனைத்திற்கும் வார இறுதியில் வந்து சுமூக தீர்வு சொல்வதில் மட்டுமல்ல, எவிக்ஷனையும் அறிவித்து அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்துவதும் கமல் தான்.
அப்படி கமலுக்கான இந்த வார புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. என்ன செஞ்சுட்டாங்க இவங்க? என்ன தகுதி இருக்கு இவங்களுக்கு இங்கே வர? எதன் அடிப்படையில் இவங்களுக்கு ஓட்டுப்போடுவாங்க? அப்படிங்கிற கேள்வி பலருக்கும் இருப்பதை நான் உணருகிறேன்..
அதற்கான பதிலை வீட்டிற்குள் இருக்குறவங்க சொல்லியிருக்காங்க. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. அதற்கு முன்பாகவே ஒருவர் வெளியேற வேண்டும். அது யார்? இன்று இரவு.. என முடித்துள்ளார்.
கமல் ஹாசன் இப்படி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பிக்பாஸ் ரசிகர்களோ இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என குழம்பி வந்தனர். இந்நிலையில் ஷிவானி தான் அந்த போட்டியாளர் என தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நாள் முதலே சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு சுற்றி வந்த ஷிவானி, சில நாட்களிலேயே பாலாவின் ஜெராக்ஸாக மாறினார். அவர் என்ன செய்கிறாரோ அதை அமோதிப்பதே இவருடைய வேலையாக மாறியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா கூட இதே காரணத்தை சுட்டிக்காட்டி அவரை வெளுத்து வாங்கினார். தற்போது புரோமோ வீடியோவில் கமல் சொன்னதும், ஷிவானியின் அம்மா சொன்னதும் ஒன்று போலவே இருப்பதால் அவர் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவார் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.