“இனி பீட்டர் பாலோடு எனக்கு எந்த உறவும் இல்லை”... திட்டவட்டமாக வெளுத்து வாங்கிய வனிதா...!
யூ-டியூப் சேனலை நடத்த பீட்டர் பாலின் உதவி தேவை என்பதால் வனிதா மீண்டும் சமரசத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து வனிதா ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான வனிதா. 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதால் உருவான சர்ச்சையால் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காகவே மாறிப்போனார்.
முதல் மனைவியிடம் முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை திருமணம் செய்ததால் வனிதா சந்தித்த விமர்சனங்களும், பிரச்சனைகளும் ஏராளம்.
இதனிடையே கடந்த மாதம் கோவாவில் தனது பிறந்தநாளை கொண்டாடிய வனிதா, குடித்து விட்டு தகராறு செய்ததால் பீட்டர் பாலை பிரிந்தார். இதுகுறித்து அவரே விளக்கமும் கொடுத்தார்.
பீட்டர் பால் குடிக்கு அடிமையானதால் ஏகப்பட்ட உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவரை அதை எல்லாம் கூட பெரிதாக ஏற்காமல் குடியை பிராதானமாக நினைத்ததால் பிரிந்ததாகவும் கண்ணீர் மல்க கூறினார்.
எப்படி வனிதா - பீட்டர் பால் திருமணம் சோசியல் மீடியாவில் பேசுபொருளானதோ?, அதேபோல் அவர்கள் பிரிந்தது பற்றியும் தேவையில்லாத கருத்துக்கள் வெளியாகின. யூ-டியூப் சேனலை நடத்த பீட்டர் பாலின் உதவி தேவை என்பதால் வனிதா மீண்டும் சமரசத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து வனிதா ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார்.
நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இது போன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.
இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவிலிருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள்.
உறவு முறிவைப் பற்றி நான் பதிவேற்றிய கடைசி வீடியோவுக்குப் பிறகு நாங்கள் இருவரும் பேசினோம். அவர் முதிர்ச்சியடைந்தவர். அவரது முடிவை அவர் எடுத்துவிட்டார். அந்த முடிவோடு என்னால் கண்டிப்பாக வாழ முடியாது. ஆனால், சொன்னதுபோல அவரது முன்னாள் மனைவி, குழந்தைகள் என் யாருமே அவர் வேண்டாம் என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனவே இப்போது உங்களுக்கு உண்மை தெரியும். நான் முட்டாளாகவும், அப்பாவியாகவும், காதலில் மதிகெட்டும் இருந்ததால் ஏமாற்றப்பட்டிருக்கிறேன்.
காதலில் என் அதிர்ஷ்டம் என்ன என்பதை நான் புரிந்து ஏற்றுக்கொண்டு விட்டேன். எனது பணி, எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். எனவே, இதற்கு மேல் ஊகிப்பதை, விவாதிப்பதை நிறுத்துங்கள். அவரோட எனக்குச் சட்டரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் இப்போது உணர்ச்சியற்றுப் போயிருக்கிறேன். நான் என் வழியில் என் வலியைக் கையாள்கிறேன்.
அத்தனை அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நேர்மறைச் சிந்தனையுடன் என் பயணம் தொடரும். உங்கள் ஆசீர்வாதத்துடன் அது என்னைச் சிறந்த இடங்களுக்கு இட்டுச் செல்லும் என பதிவிட்டுள்ளார்.