50 நாட்களுக்கு பிறகு ஆன்லைன் வந்த லாஸ்லியா... லைக்குகளை குவிக்கும் ஒற்றை போட்டோ...!
அப்பாவின் பிரிவால் மிகவும் மனம் உடைந்து போன லாஸ்லியா கிட்டதட்ட 50 நாட்களுக்குப் பிறகு தன்னுடைய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.
லாஸ்லியா சினிமா, மாடலிங் என பிசியாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு ரசிகர்கள் துடிதுடித்தனர். கனடாவில் வேலை பார்த்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரண செய்தி தான் அது.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட கடும் கெடுபிடிகளுக்கு நடுவே மரியநேசனின் உடலுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்பாவின் மரணத்தால் மனமுடைந்த லாஸ்லியாவிற்கு சக பிக்பாஸ் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஆறுதல் கூறினர்.
கடந்த நவம்பர் 16ம் தேதி தந்தை மரணமடைந்த செய்தியை ட்விட்டரில் வெளியிட்டதோடு லாஸ்லியா பெரிதாக சோசியல் மீடியாக்களில் தலை காட்டவில்லை. அவரை விசாரித்த பிரபலங்கள் பலரும் கூட அப்பாவின் பிரிவை தாங்காமல் லாஸ்லியா உடைந்து போய் இருப்பதாக கூறினர்.
தற்போது 50 நாட்களுக்குப் பிறகு லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய புன்னகையுடன் க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தந்தை மறைவிற்கு பிறகு மிகப்பெரிய சோகத்தில் இருந்து மீண்டு வரும் லாஸ்லியாவின் இந்த புகைப்படம் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகிறது. அத்துடன் மன உறுதியுடன் இருங்கள் என்றும் அவருடைய ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.