கிழியும் பீட்டர் பால் முகத்திரை! அம்பலமாகும் காதல் லீலை... தயாரிப்பாளர் ரவீந்திரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
வனிதாவின் மூன்றாவது திருமண பற்றிய தகவல் தான் தற்போது அணைத்து மீடியாக்களில் பராராப்பக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம், நாளுக்கு நாள் தீவிரம் அடைவதை பார்த்தல் இதற்கு ஒரு முடிவே இல்லை என்று தான் தோன்றுகிறது. இந்நிலையில் பீட்டர் பால் மனைவிக்கு, தொடர்ந்து சப்போர்ட் செய்து வரும் பிரபலங்களில் ஒருவரான, தயாரிப்பாளர் ரவீந்தரின் பீட்டர் பால் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண் ஒருவர் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வனிதாவின் மூன்றாவது திருமணம் நடந்ததில் இருந்தே, இது குறித்து பலர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து விமர்சித்து வந்த போதிலும், சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் அளவிற்கு அதிகமாகவே விமர்சித்தனர்.
இதனால் கடுப்பான வனிதா, இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வடபழனி காவல் நிலையில் நடந்த இந்த விசாரணையில், வனிதா மற்றும் சூர்யா தேவி இருவருமே சமரசத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வனிதா.. பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாக பேசிய லட்சுமிராம கிருஷ்ணன் தன்னை விட வயது மூத்தவர் என்று கூட பாராமல், குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவிற்கு திட்டி தீர்த்தார். பலபேரை வெளுத்தி வாங்கிய லக்ஷ்மியை இவர் வெளுத்து வாங்குவதை பார்த்து அனைவருடைய மனதும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் போனது.
பீட்டர் பால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பதை தொடர்ந்து மறுத்து வனிதா தரப்பு மறுத்து வந்தாலும், அதனை உண்மையாகும் வகையில் அடுக்கடுக்கான பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே துணை இயக்குனர் ஒருவர், பீட்டர் பால் தன்னுடைய மனைவி என வேறு ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்ததாக கூறிய நிலையில் மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தரன்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது, ஊர்மிளா ஷர்மா என்ற பெண் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். விரைவில் அவர் யார் என்பதை உலகிற்கு தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஊர்மிளா ஷர்மா தற்போது நேபாளில் உள்ளதாகவும், முடிந்தால் அவரை நேரலையில் அழைத்து வந்து பீட்டர் பாலின் முகத்திரையை கிழிப்பேன் என்பது போல் கூறியுள்ளார். எனவே இந்த விவகாரம் நாளுக்கு நாள்... சூடு பிடிப்பதோடு பீட்டர் பால் காதல் லீலைகள் அம்பலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.