படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!
கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் வனிதா சம்பந்தமான விஷயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. திருமணமான மறுநாளே வனிதாவின் புது கணவர் பீட்டர் பால் மீது அவரது முன்னாள் மனைவி குற்றச்சாட்டுக்களை அடுக்க, தற்போது பஞ்சாயத்து போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. அடுத்து வனிதாவின் முத்த அட்ராசிட்டி. திருமணத்தின் போது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தது போதாது என்று, படுக்கையறையில் தனிமையில் இருக்கும் போது இருவரும் முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதற்கு வனிதா கொடுத்துள்ள விளக்கம் கீழே...
லாக்டவுன் நேரத்தில் யூ-டியூப் வீடியோக்களை எடிட் செய்யாமல் திண்டாடிய வனிதாவிற்கு பீட்டர் பால் உதவ, இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த சனிக்கிழமை வனிதாவின் வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி எளிமையாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின் போது பீட்டர் பால் வனிதாவின் உதட்டில் முத்தம் கொடுத்து அன்பை பறிமாறிக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
மற்றொரு பக்கம் பீட்டர் பாலின் முன்னாள் மனைவியான ஹெலனுக்கும்,வனிதாவிற்கும் இடையே சண்டை ஆரம்பமாகிவிட்டது. எனது கணவரை அபகரித்துக் கொண்டார் என ஹெலன் காவல்நிலைய படியேறினார்.
வனிதாவே என்னை ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு ஹெலன் மிரட்டுகிறார் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வனிதா வாழ்க்கையில் ஏன் இப்படி சோதனை மேல் சோதனை? என ரசிகர்கள் கலங்கி நிற்க. அவரோ கூலாக காதல் கணவருடன் படுக்கையறையில் முத்தம் கொடுக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்கள் மகள்களை நினைத்து பார்த்தாவது இதுபோன்ற போட்டோக்களை வெளியிடாமல் இருக்காலாமே? என கண்டபடி
விமர்சித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, நடிகை வனிதா விஜயகுமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கார்ட்டூன் படங்களிலும், ஃபேரி டேல் புத்தகங்களிலும் இருக்கும் முத்தக்காட்சி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
அத்துடன் ''பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன், ஃபேரி டேல்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க விடாதீர்கள். அதில் இந்த முத்தக்காட்சிகள்
இருக்கின்றன”
“ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுதோ, இல்லை
திருமணம் செய்யும் பொழுதோ, அவர்கள் முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்பதை குழந்தைகள் அறியவே கூடாது'' என நக்கலாக பதில் கொடுத்துள்ளார்.