சொந்த காசில் சூனியம் வேண்டாம்! துண்டை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த பிரபலத்தை கழட்டி விட்ட பிக்பாஸ்?
பிக்பாஸ் நிகழ்ச்சில் அடிபட்டு வந்த, கவர்ச்சி கிளியின் பெயரை... அதிரடியாக தூக்க பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. காரணம், ஓவர் கவர்ச்சியால் வந்த வினை தானாம்...
தமிழில் பிக்பாஸ் சீசன் 3 கடந்த வருடம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் மலேசிய பாப் பாடகர், முகேன் வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தர்ஷன், லாஸ்லியா, கவின் ஆகியோர் ஒரு சில காரணங்களால் வெற்றிபெறவில்லை.
ஒரு வேலை பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு, கவின் வெளியில் வரவில்லை என்னால், அவரே வெற்றியாளராக மாறியிருக்கலாம். லாஸ்லியா பைனல் போக வேண்டும் என்பதற்காக கவின் தானாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஆரம்ப பணிகள் சூடுபிடித்துள்ளது.
ஓவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் ரீல் லைப் பிரபலங்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெறித்து கொள்ளவே பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்தால் புகழும், பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்பதால் ஏராளமானோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே நடிகை சுனைனா, அமிர்தா, அதுல்யா, இடையழகி ரம்யா பாண்டியன், டிக்டாக் இலக்கியா, சூர்யா தேவி. புகழ் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இலக்கியாவின் பெயரை அதிரடியாக தூக்க பிக்பாஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.
பார்க்க முடியாத அளவுக்கு குட்டி குட்டி டவல் மட்டும் காட்டிக்கொண்டு ஓவர் கவர்ச்சியில் ஆட்டம் போட்டு வரும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் வந்தால்... குடும்பத்தோடு இந்த நிகழ்ச்சியை பார்பவர்களால் பிரச்சனை வர கூடும் என்பதை யூகித்தே இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது உறுதியான தகவல் இல்லை என்பதால்... நிபந்தனைகள் அடிப்படையில், இலக்கியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.