லட்சுமி ராமகிருஷ்ணனும், கஸ்தூரியும் யோக்கியமா..! வனிதாவை பற்றி பேச தகுதியே இல்லை! பகீர் கிளப்பும் பிரபல நடிகர்
லட்சுமி ராமகிருஷ்ணனும், கஸ்தூரியும் யோக்கியமா..! வனிதாவை பற்றி பேச தகுதியே இல்லை! பகீர் கிளப்பும் பிரபல நடிகர்!
வனிதாவின் 3 ஆவது திருமணம் குறித்து, ஆன்லைன் மூலம் விவாதம் நடத்தி வரும், நாஞ்சில் விஜயன், இயக்குனர் ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், மற்றும் கஸ்தூரி ஆகியோரை வெளுத்து வாங்கியுள்ளார் பிரபல சினிமா விமர்சகரும், நடிகருமான, பயில்வான் ரங்கநாதன்.
வனிதா விவாகரத்து பெறாத ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தான் பிரச்சனை. இது முழுக்க முழுக்க பர்சனல். பீட்டர் பால் மனைவி இது குறித்து புகார் கொடுத்துள்ளார், அதனை போலீசார் விசாரித்துள்ளனர் நீதி மன்றத்தில் அதற்கான தீர்வு கிடைக்கும்.
ஆனால் இடையில் உள்ளே புகுந்து விவாதம் செய்ய, இது டிவி நிகழ்ச்சி கிடையாது என, லட்சுமி ராமகிருஷ்ணனை தாக்கி பேசியுள்ளார்.
நானும் ஒரு நடிகன் தான், யார் எப்படி என்பது எனக்கும் தெரியும். வனிதாவை பற்றி பேச கஸ்தூரி, சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்னன், நாஞ்சில் விஜயன் போன்றவர்களுக்கு தகுதியே இல்லை. முதலில் அடுத்தவர் பற்றி பேசும் போது நாம் யோக்கியமா என்பதை நினைத்து பார்த்து பேச வேண்டும் என வெளுத்து வாங்கியுள்ளார்.
அதுவும், நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது... வனிதாவின் விஷயத்துக்கு நான்கு பேர் விவாதம் செய்தது பற்றியும் விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
பீட்டர் பால் மனைவிக்கு, இவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் அதனை இப்படி, சமூக வலைதளத்தில் பேசி தெரிவிக்க கூடாது.
வனிதாவும், தன்னுடைய யூடியூப் சேனலை ப்ரமோட் செய்யும் நோக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களையும், பதிவுகளையும் வெளியிட்டு வருவது கண்டிக்க தக்கது என தெரிவித்துள்ளார்.