“பயந்துட்டியா குமாரு”... ட்விட்டரில் பிளாக் செய்த வனிதாவை பங்கமாய் கலாய்த்த கஸ்தூரி...!
வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரம் யூ-டியூப் பஞ்சாயத்துக்களை எல்லாம் கடந்து தற்போது ட்விட்டரில் முட்டிக்கொண்டு நிற்கிறது.
வனிதா - பீட்டர் பால் 3வது கல்யாண பஞ்சாயத்து என்று முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை. நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.
வனிதா திருமணம் செய்யும் வரை கூட்டம் கூட்டமாக வாழ்த்து கூறியவர்கள் எல்லாம், பீட்டர் பால் முதல் மனைவியை முறையாக விவகாரத்து செய்யாத விவகாரம் வெளியே வந்ததும் கழுவி ஊத்த ஆரம்பித்துவிட்டனர்
எப்படிப்பட்ட ஆளையும் பேசியே சரியும் வனிதா சும்மா விடுவாரா? என்ன அவரும் சகட்டுமேனிக்கு விளாசி வருகிறார். ஆன்லைன் பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒருமையில் விளாசிய வனிதா, கஸ்தூரியை கண்டது மட்டும் ஜகா வாங்கியுள்ளது ஏன் என்பது தான் தெரியவில்லை. ட்விட்டரில் தற்போது வனிதா - கஸ்தூரி சண்டை அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
கஸ்தூரியை குறிப்பிட்டு வனிதா இவ்வாறு ட்வீட் செய்திருந்தார், கஸ்தூரி, எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை அளித்திருக்கிறார். உங்களுக்கு வாழ்க்கை. அதனால் நீங்கள் அவருக்கு நிதி உதவியும் செய்யலாம். அவருக்கு நீங்களும், தமிழ்நாடும் இருக்கிறது” என பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த கஸ்தூரி, நான் யாருடைய புருஷனையும் திருடவில்லை. 40 வயதில் இளம் வயது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவில்லை. நான் எலிசபெத் ஹெலனுக்கு சட்டப்படி ஆதரவளிப்பேன் பதிலடி கொடுத்தார்.
இப்படி மாறி, மாறி இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் கஸ்தூரியை பிளாக் செய்துவிட்டதாக வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள கஸ்தூரி பயந்துட்டியா குமாரு... என வனிதாவை பங்கமாக கலாய்த்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனிடம் சண்டைக்கு வா, வா என அழைத்த வனிதா, கஸ்தூரியை கண்டதும் ஓரங்கட்டியது ஏன் என நெட்டிசன்கள் சிந்தித்து வருகின்றனர்.