அழுது கொண்டே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அனிதா..! கட்டி அணைத்து ஆறுதல் கூறிய நெகிழ்ச்சி தருணம்..!
கடந்த மூன்று நாட்களாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினர்களாக எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் வருகை தந்துகொண்டிருக்கிறார்கள்.
இதுவரை, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரேகா, ஆகியோர்களை தொடர்ந்து, சுசித்ரா சனம் ஷெட்டி, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களை உட்சாகப்படுத்தி வருகிறார்கள்.
இதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓரிரு நாட்களிலேயே தன்னுடைய அப்பாவை இழந்த அனிதா சம்பத் உள்ளே வருகிறார்.
தனக்கு ஏற்பட்ட இழப்பில் இருந்து இன்னும் மீளாத அனிதா சம்பத்... அழுது கொண்டே பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.
மேலும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவரை அரவணைத்து ஆறுதல் கூறினார்கள். குறிப்பாக வேல்முருகன் ’நாங்கள் இனி உனக்கு அப்பாவாக இருக்கிறோம்’ என்று ஆறுதல் கூறுகிறார்.
அதேபோல் மற்ற போட்டியாளர்களும் ’அப்பாவை நினைத்து கவலைப்பட வேண்டாம், மனதை தைரியப்படுத்தி கொள்’ என்று அனிதாவுக்கு ஆறுதல் கூறும் நெகிழ்ச்சி தருணங்கள் தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.
பின்னர் அனிதா அப்பா குறித்து பேசியது அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் கைதட்டி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.