எச்சில் தெறிக்கும்... ரொம்ப கீழ்த்தனமா இருக்கு! சண்டைக்கு பாய்ந்த அனிதா சம்பத்..! முதல் வாரமே குறும்படமா?
முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு, பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும், இரண்டாவது நாளான இன்று சண்டை அமோகமாக நடக்கிறது. அதுவும் கியூட்டாக பார்க்கப்பட்ட அனிதா சம்பத் சண்டைக்கு சீறி வருகிறார்.
முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு, பிரச்சனையும் இல்லாமல் இருந்தாலும், இரண்டாவது நாளான இன்று சண்டை அமோகமாக நடக்கிறது. அதுவும் கியூட்டாக பார்க்கப்பட்ட அனிதா சம்பத் சண்டைக்கு சீறி வருகிறார்.
சுரேஷ் சக்கரவர்த்தி தன்னிடம் பேசும்போது செய்தி வாசிப்பவர்களிடம் நான் பேச மாட்டேன், ஏனென்றால் அவர்களுடன் பேசும்போது எச்சில் தெறிக்கும்’ என்று கூறியதாக அனிதா சம்பத் குற்றம் சாட்டினார்.
ஆனால் நான் அவ்வாறு பேசவே இல்லை, இல்லாத ஒன்றை அவர் கூறுவதாக தெரிவிக்கிறார் சுரேஷ்.
சிலர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என கூறி விவாதம் செய்வதாகவும் தெரிவிக்கிறார்.
பின்னர் அனிதா சம்பத் இவ்வாறு எச்சில் தெறிக்கும் என்று கூறுவது கீழ் தனமாக உள்ளது. அவர் கூறியதற்கு ஆதாரமாக குறும்படம் போட்டுப் பார்ப்போம் என்று கூற அதற்கு சுரேஷ் சக்ரவர்த்தி பெரிய படமே போட்டு பார்ப்போம் என அந்த இடத்தில் இருந்து செல்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக சில சமயங்களில், பொய் சொல்லுபவர்கள் குற்றத்தை நிரூபிக்க குறும்படம் போடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை முதல் வாரத்திலேயே குரும்பப்படம் போடப்படுமா? அனிதா சொல்வது உண்மையா அல்லது சுரேஷ் சக்கரவர்த்தி சொல்வது உண்மையா என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பார்க்க வேண்டும்.