அட நம்ம யாஷிகாவா இது?.... ஸ்லிம் லுக்கில் ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு கொடுத்த அடக்க ஒடுக்கமான போஸ்கள்!
முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து" பட நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் பிரபலமடைவதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். பப்ளிசிட்டி கிடைத்த அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்காததால் ரூட்டை மாற்றியுள்ள யாஷிகா ஆனந்த், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறு வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு யாஷிகாவிற்கு சில திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் அதில் சொல்லிக்கொள்ளும் படியான கேரக்டர் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த், படு சூடான தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.
முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டினார்.
இந்நிலையில், கடந்த 3 மாதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது. எனவே படப்பிடிப்பு இல்லாத இந்த நாட்களை பயன்படுத்தி கொண்டு, ஹெவி ஒர்க் அவுட் செய்து செம்ம பிட்டாக மாறியுள்ளார்.
மூன்று மாதத்தில் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என அவர் தனது போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர் தொப்புளில் மாட்டியிருந்த கம்மலை பார்த்தும் நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.
அதுவும் ஒன்றும் ஒர்க் அவுட் ஆகாததால் யாஷிகா ஆனந்த் தனது ரூட்டை அதிரடியாக மாற்றினார். அதாவது இதுவரை படங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் “ரோஜா” சீரியலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோஜா சீரியலில் நடிக்க ஒரு எபிசோடுக்கு ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.சீரியலில் நடிப்பது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் இன்னும் வாய் திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முழு நேரம் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்த யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
எப்போதுமே ஹாட் கிளிக்ஸை தட்டிவிடும் யாஷிகா, ராணி கெட்டப்பில் பார்க்க செம்ம அழகாக இருக்கிறார்.
கிராண்டான உடை, கண்கவரும் நகைகள், மனம் மயங்கும் மேக்கப் என சகட்டுமேனிக்கு யாஷிகாவின் அழகை அதிகரித்து காட்டும் இந்த போட்டோ ஷூட் லைக்குகளை குவித்து வருகிறது.
ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பின்னர் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்களே இது யாஷிகா ஆனந்த் தானா என ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.