யாஷிகாவின் பொங்கல் பரிசு... பட்டுப்புடவையில் தகதகவென ஜொலிக்கும் போட்டோஸ்...!
பொங்கல் பரிசாக தலைநிறைய மல்லிகைப்பூவுடன், பட்டுப்புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.
தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன.
அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. முன்னழகு, பின்னழகை காட்டி சோசியல் மீடியாவை சூடேற்றி வரும் யாஷிகா ஆனந்தின் போட்டோ ஷூட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தட்டிவிடும் யாஷிகா ஆனந்த மிக மிக அடக்க ஒடுக்கமான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
பொங்கல் பரிசாக தலைநிறைய மல்லிகைப்பூவுடன், பட்டுப்புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள யாஷிகா துளியும் கவர்ச்சி இன்றி பட்டுப்புடவையில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அழகான கல் வைத்த நகைகளை அணிந்து மெழுகு சிலை போல் ஜொலிக்கும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.