Vanitha Vijayakumar: கொட்டோ கொட்டுனு கொட்டும் துட்டு... துணிந்து புதிய தொழிலில் இறங்கி கெத்து காட்டும் வனிதா!
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar), தற்போது புதிய தொழிலை தொடங்கியுள்ளார் (Started new business). இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார் (Vanitha Vijayakumar), தற்போது புதிய தொழிலை தொடங்கியுள்ளார் (Started new business). இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பல சர்ச்சைகளை கடந்து, மீண்டும் திரையுலகிலும், சின்னத்திரையுலும் பிஸியாகியுள்ள வனிதா, அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால், யூடியூப் சேனலை தொடர்ந்து, தற்போது புதிய பிஸ்னஸ் ஒன்றையும் தொழிலை தொடங்கியுள்ளார்.
பீட்டர் பால் குறித்த நீண்ட பிரச்சனைக்குப் பிறகு, தற்போது வனிதா வாழ்வில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது. திரைப்படங்களில், குணச்சித்திர வேதங்கள் மட்டும் இன்றி ஹீரோயினாகவும் நடிக்க துவங்கி விட்டார்.
பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வாழ்க்கையை ஆரம்பித்த வனிதா அதேவேகத்தில் முடித்துக் கொண்டார். வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு பீட்டர் பால் மூக்கு முட்ட குடித்ததால் பிரச்சனை செய்தார். அதன் பின்னர் சென்னை திரும்பிய பிறகு இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை வெடிக்கவே... மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்தது.
தற்போது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதாவிற்கு சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்க சூப்பர் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
பவர் ஸ்டாருக்கு ஜோடியாக 'பிக்கப் ட்ரோப்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
எனவே வனிதா காட்டில் பண மழை பெய்து வருவதால், அதனை தற்போது புதிய தொழிலில் முதலீடு செய்துள்ளார். புதிய டிரஸ் ஷாப் ஒன்றை துவங்கியுள்ளார்.
இதில் பெண்களுக்கான அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் விதமாக துவங்கியுள்ளார். இவரது புதிய தொழிலுக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில், வனிதா விஜயகுமார் விஜய் டிவி நிகழ்ச்சியில் இருந்து ரம்யா கிருஷ்ணன் குறைவான பாயிட்ஸ் வழங்கியதாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.