சூடுபிடிக்கும் பீட்டர் பால் விவகாரம்...! வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
வனிதா - பீட்டர் பால் தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று விசாரணை செய்த, சைதாப்பேட்டை நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு எதிர்ப்புகள் வந்த போதும், பீட்டர் பால் தான் வேண்டும் என அவரை காதலித்து 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டவர் நடிகை வனிதா விஜயகுமார்.
இரண்டு கணவர்களை பிரிந்து இவர் மூன்றாவது நபராக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அது அனைத்தையும் மிகவும் போல்டாக நின்று எதிர்த்தார்.
பீட்டர் பால் மனைவி எலிசபெத்தின் பிரச்சனை வந்த போது... அவருக்கு சப்போர்ட் செய்த, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலருக்கும் பளார் பதிலடிகளால் தெறிக்கவிட்டார்.
பிள்ளைகளின் சம்மதத்தோடு, தன் வாழ்க்கை துணையை தேடி, எளிமையான முறையில் அவர் வீட்டில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதே நேரத்தில் இந்த திருமணம் செல்லாது என்பதையும் வனிதாவின் லாயர் தெரிவித்திருந்தார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இடியாக இறங்கியுள்ளது, பீட்டர் பாலுக்கு இருந்த புகைப்பழக்கமும், குடி பழக்கமும்.
இந்த குடி பழக்கத்தால் வந்த வினை, வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார். இனி அவர் தன் வாழ்க்கையில் இல்லை என்பதையும் வீடியோவில் அழுதபடி கூறினார்.
இவர் அப்படி வெளியிட்ட வீடியோக்களுக்கு சிலர் ஆறுதலாக கமெண்ட் செய்த போதிலும், எப்போதும் போல் சிலர் விமர்சிக்கவும் தொடங்கினார். ஆனால் தற்போது பீட்டர் பால் நினைவில் இருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து மீண்டும் தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
.
இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகை வனிதா, பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீண்டும் வனிதா - பீட்டர் பால் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.