கையில் பையுடன் காட்டில் சுற்றிய தமன்னா... லேட்டஸ்ட் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை...!
கடந்த மார்ச் மாதம் முதலே லாக்டவுன் காரணமாக பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். ஐ.டி. நிறுவனங்கள் அனைத்தும் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்த படியே பணி செய்யும் படி உத்தரவிட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட சாமானியர்கள் வீட்டை விட்டு கிளம்ப முடியாமல் சிக்கித் தவித்து வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் ஊர் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
3 மாதங்களுக்கும் மேலாக கொடைக்கானலுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூரி, விமல் உள்ளிட்டோர் பேரிஜம் ஏரியில் மீன் பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.
இதனை அடுத்து, விமல் மற்றும் சூரி உள்ளிட்டோருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
லாக்டவுன் நேரத்தில் தடையை மீறி அவர்கள் பேரிஜம் ஏரியில் மீன்பிடித்தது தொடர்பாக கொடைக்கானல் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மில்க் பியூட்டி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார்.
லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் மும்பையில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வீட்டில் உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது போன்ற போட்டோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறது.
தமன்னா பை ஒன்றை மாட்டிக்கொண்டு காட்டில் டிரக்கிங் செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.அத்துடன் இயற்கையில் தொலைந்து போங்கள், உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள் என பதிவிட்டிருந்தார்.
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் இதற்கு முன்னதாக எடுத்ததா? இல்லை தமன்னா சில திரைப்பிரபலங்களை போல அனுமதியின்றி டிரக்கிங் செய்தாரா? என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது.