34 வயதில் இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை... மனதை பதை பதைக்க வைக்கும் இறுதிக்காட்சிகள்... புகைப்பட தொகுப்பு...!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 'MS Dhoni: The Untold Story' படத்தில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் சடலத்தை போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் காட்சிகள் இதயத்தை உலுக்குகிறது.
கிஸ் தேஷ் மே ஹை மேரா தில் என்ற டி.வி. நிகழ்ச்சி மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
2013ம் ஆண்டின் கை போ சே (Kai Po Che) என்ற படம் மூலம் அறிமுகமான சுஷாந்த், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்ததால் ரசிகர்களுக்கு பிடித்த இளம் நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.
தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட 'MS Dhoni: The Untold Story' படம் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டதால் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
இந்நிலையில் பந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக மும்பையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
34 வயதே ஆன சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேள்விப்பட்டதும் ரசிகர்களும், செய்தி ஊடகங்களும் அவரது வீட்டின் முன்பு குவிய ஆரம்பித்தனர்
தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை வெளிவராத நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுக்கப்பட்ட 'MS Dhoni: The Untold Story' படம் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டதால் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
Sushant singh Rajput