பிக்பாஸ் ரசிகர்களின் இதயத்தை சுக்கு நூறாக நொறுக்கிய தர்ஷனின் முன்னாள் காதலி... சனம் ஷெட்டி கொடுத்த அதிர்ச்சி!
அதற்காக மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து சனம் ஷெட்டியும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தர்ஷன். நான் பட வாய்ப்பு தருகிறேன் என உலக நாயகன் கமல் ஹாசனே பாராட்டும் அளவிற்கு நடந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சமத்து பிள்ளையாக வெளியே வந்த தர்ஷன், காதலி சனம் ஷெட்டி விவகாரத்தில் சறுக்க ஆரம்பித்தார்.
நிச்சயதார்த்தம் வரை சென்ற காதல் விவகாரம் தர்ஷனால் தடுத்து நிறுத்தப்பட்டது. சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என பிடிவாதமாக நின்றார். அந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது எல்லாமே தெரிந்த விஷயம் தான்.
இன்னும் இரண்டே நாட்களில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதற்காக மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து சனம் ஷெட்டியும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சனம் ஷெட்டி, ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்கிறீர்கள் என நான் கேள்விப்பட்டேன், அது உண்மையா? என கேட்க அதற்கு சனம் ஷெட்டி ‘நானும் கேள்விப்பட்டேன்’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே லட்சுமி மேனன், அபிஹசன், ஆர்.ஜே. அர்ச்சனா உள்ளிட்ட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக்கூறி வந்த நிலையில் சனம் ஷெட்டியும் இவ்வாறு பதிலளித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.