திடீர் முத்தக்காட்சி... மிரட்டிய தயாரிப்பாளர்... விரட்டிய நடிகர்... சமீரா ரெட்டி பகிர்ந்து கொண்ட பகீர் அனுபவம்
சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளார் முன்னணி நடிகையாக இருந்த சமீரா ரெட்டி.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது.
இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் திருத்திவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீரா, 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்கு தாயானார்.
தற்போது மகிழ்ச்சியான குடும்ப தலைவியாக வலம் வரும் சமீரா ரெட்டி தனக்கு திரையுலகில் நேர்ந்த பகீர் அனுபவங்கள் குறித்து ஆன்லைன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
நான் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அதில் திடீர் முத்தக்காட்சி சேர்க்கப்பட்டது. அது எனக்கு முன்பே கூறப்படவில்லை, அதனால் நடிக்க மாட்டேன் என கூறினேன். நீங்கள் முன்பே Musafir படத்தில் முத்த காட்சியில் நடித்தீர்களே என கூறி என்னை ஒப்புக்கொள்ள வைக்க பார்த்தார்கள். நான் தொடர்ந்து மறுத்ததால் ஜாக்கிரதை இந்த படத்தில் இருந்து உங்களை மாற்றிவிடுவேன் என தயாரிப்பாளர் மிரட்டினார்.
மற்றொரு படத்தில் நடிக்கும் போது ஒரு ஹீரோ, உங்களை நெருங்கவே முடியலை... உங்களுடன் நடிப்பது மிகவும் போரடிக்கிறது, ஜாலியாக இல்லை. மீண்டும் உங்களுடன் நடிக்க விரும்பவில்லை எனக்கூறியதாக பகீர் கிளப்பியுள்ளார்.
நான் மற்ற நடிகர்களுடன் பார்ட்டிக்கு போக மாட்டேன், சகஜமாக பழகமாட்டேன். அது பட வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றாலும் அப்படி செய்யமாட்டேன். இந்த தொழிலே இப்படித்தான் என காஸ்டிங் கவுச் குறித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.