கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு சவால் விட்ட சமந்தா... மாமனார் சொன்ன காரியத்தை எப்படி முடிச்சிருக்காங்க பாருங்க
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா லாக்டவுன் நேரத்தில் பிரபல நடிகைகளான கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவிற்கு சவால் ஒன்றை விட்டுள்ளார். அது தான் இப்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வீட்டிற்குள் இருக்கும் போது கூட ஏதாவது எண்டர்டெயின்மெண்ட் வேண்டாமா? அதனால் தினமும் புதுப்புது சேலஞ்ச்களை சோசியல் மீடியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். .
அந்த வகையில் தற்போது இந்தியாவில் மரம் நடும் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பலரும் தங்களுக்குள் மரம் நடும் சவலை விடுத்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா மரக்கன்று நட்டு அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அத்துடன் தனது மருமகளும், பிரபல நடிகையுமான சமந்தாவிற்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்து மரக்கன்றுகளை நடச் சொன்னார்.
அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சமந்தாவும், மாமனார் நாகார்ஜுனாவுடன் சேர்ந்து 3 மரக்கன்றுகளை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.
மாமனார், மருமகள் இருவரும் சேர்ந்து மரக்கன்றுகளை நடும் வீடியோவும் போட்டோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
தனக்கு வந்த சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்து முடித்த சமந்தா அடுத்ததாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கும், தனது நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டிக்கும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்துள்ளார்.
சமந்தாவின் உயிர் தோழியான ஷில்பாவும் அந்த சவாலை உடனே ஏற்றுக்கொண்டு தனது மகனுடன் சேர்ந்து மரக்கன்று ஒன்று நட்டு வைக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபல நடிகைகளான கீர்த்தி சுரேஷும், ராஷ்மிகா மந்தனாவும் அந்த சேலஞ்சை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்களா?... அடுத்து யாருக்கு சவால் விடுப்பார்கள்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.