தனது செல்லத்துடன் கொஞ்சி விளையாடும் சாய் பல்லவி... பச்சை புல்வெளியில் எவ்வளவு ஆனந்தமா இருக்காங்க பாருங்க...!
அதன் பின்னர் சோசியல் மீடியாவில் எந்த போட்டோவையும் பகிராமல் இருந்த சாய் பல்லவி தற்போது தனது செல்லகுட்டியுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஒரே படத்தில் இந்தியா முழுவதும் பேமஸ் ஆவது எல்லாம் சாய் பல்லவி போல் எல்லா நடிகைகளுக்கும் கிடைக்காது. டாக்டர் படித்துள்ள சாய் பல்லவி கலை மீது கொண்ட ஆர்வம் காரணமாக மலையாளத்தில் வெளியான “பிரேமம்” படத்தில் நடித்தார்.
2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்" படத்தில் மலர் டீச்சராக சிறிது நேரமே வந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார்.
தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
கதைக்கும் தனக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த சாய்பல்லவி திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற போது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
அதன் பின்னர் சோசியல் மீடியாவில் எந்த போட்டோவையும் பகிராமல் இருந்த சாய் பல்லவி தற்போது தனது செல்லகுட்டியுடன் கொஞ்சி விளையாடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
பூக்கள் நிறைந்த புல்வெளியில் தனது செல்ல நாய் குட்டியான குஷியுடன் மகிழ்ச்சியாக விளையாடுகிறார்.
பிரேமம் படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அதே ஹேர்ஸ்டைலில் சிம்புளாக இருந்தாலும் சாய் பல்லவி தனி அழகுடன் ஜொலிக்கிறார்.
லாக்டவுன் நேரத்தில் சாய் பல்லவி தரிசனம் கிடைக்காமல் தவித்த ரசிகர்களுக்கு இந்த போட்டோஸ் மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த போட்டோவை பார்க்கும் குறும்புக்கார ரசிகர்கள் பலரும் அந்த குட்டி நாயாக நாங்க இருந்திருக்க கூடாதா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.