அறுவை சிகிச்சைக்கு பின் மகளுடன் நடிகை ரோஜா வெளியிட்ட புகைப்படங்கள்..!
நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அறுவை சிகிச்சை நடந்த நிலையில், தற்போது உடல் நலம் தேறி... குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரோஜா, அரசியலிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் ரோஜா, ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மார்ச் மாதம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்த நடிகை ரோஜாவின் கணவர் ஆர்.கே.செல்வமணி அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் வரை, ஓய்வில் இருந்த அவர் தற்போது குணமடைந்துள்ள நிலையில், தன்னுடைய மகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.