சமந்தாவின் சவாலை நிறைவேற்றி லைக்குகளை அள்ளும் ராஷ்மிகா... கண்டுகொள்ளாத கீர்த்தி சுரேஷ்...!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வீட்டிற்குள் இருக்கும் போது கூட ஏதாவது எண்டர்டெயின்மெண்ட் வேண்டாமா? அதனால் தினமும் புதுப்புது சேலஞ்ச்களை சோசியல் மீடியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர். அப்படி சமந்தா விட்ட சவால் ஒன்றை ராஷ்மிகா மந்தனா வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் மரம் நடும் சேலஞ்ச் வைரலாகி வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பலரும் தங்களுக்குள் மரம் நடும் சவலை விடுத்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா மரக்கன்று நட்டு அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். அத்துடன் தனது மருமகளும், பிரபல நடிகையுமான சமந்தாவிற்கு கிரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்து மரக்கன்றுகளை நடச் சொன்னார்.
அந்த சவாலை ஏற்றுக்கொண்ட சமந்தாவும், மாமனார் நாகார்ஜுனாவுடன் சேர்ந்து 3 மரக்கன்றுகளை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.
மாமனார், மருமகள் இருவரும் சேர்ந்து மரக்கன்றுகளை நடும் வீடியோவும் போட்டோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
தனக்கு வந்த சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்து முடித்த சமந்தா அடுத்ததாக நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா ஆகியோருக்கும், தனது நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டிக்கும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்தார்.
உயிர் தோழியான சமந்தா விட்ட சவாலை அன்றே ஷில்பாவும் நிறைவேற்றினார். தனது மகனுடன் சேர்ந்து மரக்கன்று ஒன்று நட்டு வைக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார்.
தற்போது சமந்தாவின் சவாலை ஏற்றுக்கொண்ட ராஷ்மிகா மந்தனா அவரது வீட்டு தோட்டத்தில் செடி ஒன்றை நட்டு வைத்துள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ராஷ்மிகா சமந்தாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராஷ்மிகா மந்தனா நடிகைகள் நிக்கி கல்ராணி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
இதையடுத்து ராஷ்மிகா மந்தனா நடிகைகள் நிக்கி கல்ராணி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.
சமந்தா விட்ட சவாலை கண்டு கொள்ளாத கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாயுடன் ஜாலியாக விளையாடி பொழுதைக் கழித்து வருகிறார்.