3 நொடியில் காதலில் விழுந்து விட்டேன்... தன் செல்லத்தை அறிமுகம் செய்து இளம் நெஞ்சங்களை ஏங்க விட்ட ராஷ்மிகா!
குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா தன்னுடைய மனம் கவர்ந்த செல்லத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மனதை கரைய வைத்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.
ஏற்கனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா, 3 வினாடியில் காதலில் விழுந்து விட்டதாக கூறி, தன்னுடைய மனதை கொள்ளை கொண்ட செல்லத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
நண்பர்களே.. பல குழப்பங்களுக்கு நடுவே, எனது மகிழ்ச்சியை கண்டறிந்துள்ளேன். இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது. என் செல்லத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். இவள் பெயர் ஆரா.. என குறிப்பிட்டு.
தன்னுடைய நாய் குட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ஆராவை பார்த்த 3 வினாடிகளில் காதலில் விழுந்தேன் என்றும் கூறியுள்ள ராஷ்மிகா, இவள் என் இதயத்தை 0.3 மில்லி செகண்டில் உருக்கிவிட்டாள். இதனை உங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்’ என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவை பார்த்து இவரது இளம் ரசிகர்கள் சற்று ஏங்கி தான் போய் உள்ளனர் என்பது கமெண்டுகள் மூலம் தெரிகிறது.