“எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை தான் வேணும்”... அடம்பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்...!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டுமென மனம் திறந்துள்ளார். கடைசியில் இருக்கும் கன்டிஷனை பார்த்துவிட்டு யாராவது பொருத்தமாக இருக்கிறீர்களா என முடிவு செய்து கொள்ளுங்கள்...
கார்த்தியின் ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின் சூர்யாவுடன் "என்.ஜி.கே." , கார்த்தியுடன் "தேவ்"உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தமிழில் படங்களில் தேவையான அளவு மட்டுமே கவர்ச்சி காட்டி வந்த ரகுல், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து, சென்சார் செய்யும் அளவிற்கு கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார்.
குறிப்பாக தற்போது ஊடரங்கு நேரம் என்பதால் ஒர்க் அவுட் வீடியோக்கள் மற்றும் போட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
லாக்டவுன் நேரத்தில் பிரபல நடிகைகள் பலரும் தங்களுடைய சொந்த வாழ்க்கை குறித்து பல விஷயங்களை ஆன்லை மீடியாக்களில் பேட்டியாக கொடுத்து வருகின்றனர்.
அப்படி பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ள ரகுல் ப்ரீத் சிங் தனது காதல், திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
உங்களுக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய கணவர் மிகவும் உயரமாக இருக்க வேண்டும் என்றும், நானே தலை தூக்கி பார்க்கும் அளவிற்கு அவர் கம்பீரமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் புத்திசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஸ்பெஷல் கன்டிஷன் போட்டுள்ளார்.இந்த குவாலிட்டி இருக்கும் இளசுகள் யாராவது இருந்தால் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அப்ளிகேஷன் போட்டு பாருங்கள்...!